இன்று திறம்பட வாழலாம் கடந்த காலத்தின் நிகழ்வுகள் மறைந்து விட்டன. அவற்றைப் பற்றி யோசிப்பதில் ஒரு பலனுமில்லை. கடந்த காலத்தைப் பற்றி வேதனைப் படுவதும் வருந்துவதும் முற்றிலும் பயனற்றது. இன்று எப்படி வாழ்கிறோம் என்பது தான் முக்கியம். நமது மனப்பாங்கு நேர்முறையாக இருக்க வேண்டும், நோக்கம் நன்னம்பிக்கை உள்ளதாக இருக்க வேண்டும். நாம் எவ்வளவு சந்தோஷம் விரும்புகிறோமோ அவ்வளவு சந்தோஷமாக இருக்கலாம்.
Posts in category ஊக்கம்
மற்றவரை நம்ப வைக்க வேண்டிய அவசியமில்ல...
மற்றவரை நம்ப வைக்க வேண்டிய அவசியமில்லை உங்கள் அற்பமான விருப்புகள் வெறுப்புகள் இவற்றில் எதிலாவது உங்களுக்கு நிச்சயமான நம்பிக்கை இருந்தால், அதை நீங்கள் மற்றவர் ஒருவருக்கு தெரிவிக்கலாம். ஆனால், அவர்கள் அதை வரவேற்கவில்லையெனில், அதைப் பற்றி அவர்களை நம்ப வைக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் வழி உங்களுக்கு உள்ளது, மற்றவர் அவர் வழியில் போகட்டும். சில சமயம் நாம் மற்றவர்களுக்கு அளவுக்கு மீறிய முக்கியத்துவம் அளிக்கிறோம். அற்பமான விஷயங்களுக்காக மற்றவர்களுடன் போராடுவது நேரத்தை வீணக்குவதாகும். […]
திட நம்பிக்கைகளை கைவிடாதீர்கள்
திட நம்பிக்கைகளை கைவிடாதீர்கள் உங்களுக்கு ஏதாவது ஒன்றில் திட நம்பிக்கை இருந்தால், அதை உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். கட்டாயம் மற்றவரின் சொற்களைக் கேட்டுக் கொள்ளுங்கள், அதில் ஏதாவது பயனுள்ளதா என்றும் பாருங்கள். ஆனால், உங்களைப் பற்றி திடமான நம்பிக்கை வைத்துக் கொண்டு, நீங்களே தீர்மானம் செய்துக் கொள்ளுங்கள். உதாரணமாக, நீங்கள் ஒரு மருத்துவரென்றால், ஒருவித சிகிச்சையை நம்புகிறீர்கள் என்றால், மற்றவர் ஒருவர் வேறொரு மருத்துவரின் சிகிச்சையை புகழ்ந்து சிலாகித்தால், அதை மதிப்பிடுங்கள்; ஆனால், உங்கள் […]
விரைவில் மன்னிப்பு கேட்க வேண்டும்
விரைவில் மன்னிப்பு கேட்க வேண்டும் தவறுகள் ஏற்படுகின்றன. எல்லோரும் தவறுகள் செய்கின்றனர். அது பரவாயில்லை. எது சரியில்லையென்றால், செய்த தவறுக்கு கூடிய சீக்கிரம் மன்னிப்பு கேட்காமல் இருப்பது தான். ஏதோ கட்டுப்பாடு இழந்து சொற்களோ செயல்களோ நிகழ்ந்து விட்டன. ஒருவேளை சோர்வு அல்லது அதிக கோபம் இருந்திருக்கலாம். மற்றவரும் பதிலுக்கு உங்களைப் போலவே நடந்துக் கொள்ளலாம், அல்லது அமைதியாக இருக்கலாம். ஆனால், சம்பவத்தை ஆரம்பித்தது நீங்களானால், அல்லது முதலாவதாக மற்றவரை துன்புறுத்தும் விதத்தில் பேசியதோ ஏதாவது […]
நண்பராக்கிக் கொள்ளுங்கள்
நண்பராக்கிக் கொள்ளுங்கள் தூரத்திலிருந்து பார்த்தால், புரியாத உருவம் ஓர் ஆவி போல தெரியும். அருகில் சென்றால், அதுவும் பல விதத்தில் உங்களைப் போல ஒரு மனிதர் தான் என்று புரியும். ஒருவரை அறிந்துக் கொள்ளாத போது, முக்கியமில்லாத பேதங்கள் மட்டும் தெரியும், பயமும் தோன்றும். அவரை நண்பராக்கிக் கொள்ளுங்கள். அன்பு ஒன்று தான் தெரியும்.
கருணை தான் முக்கியமான விதி
கருணை தான் முக்கியமான விதி வாழ்க்கையை பகிர்ந்துக் கொள்ளவோ, அல்லது மணம் புரிந்துக் கொள்ளவோ ஒரு துணைக்காக நீங்கள் தேடும்போது, “கருணையை” முக்கிய கட்டளை விதியாக வைத்துக் கொள்ளுங்கள். அவரோ அவளோ தொழிற்பண்பட்டவராகவோ, செல்வந்தராகவோ, அழகானவராகவோ அல்லது திறமையானவராகவோ இருந்தால் அது ஒரு மிகவும் சிறந்தது தான். ஆனால் இவையெல்லாம் நீடிக்காமல் போகலாம், அல்லது சிறிது காலம் கழித்து அவ்வளவு முக்கியமில்லாமல் போகலாம். ஆனால் கருணை எப்போதும் மிகவும் அவசியமாக இருக்கும், எப்போதும் மேலும் […]
நம்மையே நேசிப்பது
நம்மையே நேசிப்பது மற்றவர்களுடைய ஒப்புதலும் மற்றவர்கள் நம்மை விரும்புதலும் நமக்கு ஒரு சுகமான உணர்ச்சியை தருகிறது. ஆனால் சந்தோஷமான வாழ்க்கைக்கு இவை கட்டாயமும் இல்லை, இன்றியமையாதவையும் இல்லை. பிறத்தியார் நம்மை அங்கீகரித்தாலும், அங்கீகரிக்காவிட்டாலும், அதனால் நாம் குறைவதும் இல்லை, மேம்படுவதும் இல்லை. முக்கியமானது என்னவென்றால், நாம் நம்மையே நேசிப்பதும் அங்கீகரிப்பதும் தான். இதை நாம் சாதித்து விட்டால், மற்றவர்களுடைய ஒப்புதலுக்காக நாம் அவதிப் பட வேண்டிய அவசியமில்லை.
மற்றவருடன் நம்மை ஒப்பிடக் கூடாது
மற்றவருடன் நம்மை ஒப்பிடக் கூடாது நாம் நம்மை ஒருபோதும் மற்றவருடன் ஒப்பிடக்கூடாது. வாழ்க்கையில் எப்போதும் நம்மை விட சிலர் மேம்பட்ட நிலையில் இருப்பார்கள், சிலர் தாழ்வான நிலையில் இருப்பார்கள். மற்றவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம், கற்றுக்கொள்வது நல்லதுமாகும். ஆனால் நமது வெற்றியையும் தோல்வியையும் மற்றவர்களை வைத்து நாம் அளவிடக் கூடாது. நாம் நமது திறமைகளுக்கும் ஆற்றல்களுக்கும் ஒப்பாக வாழ்கிறோமா என்று தான் அளவிட வேண்டுமே தவிர, மற்றவர்களின் வாழ்வில் நடப்பதைக் கொண்டு நாம் நம்மை அளவிடக் […]