இயற்கையுடன் சிறிது காலத்தைக் கடத்துங்கள் இயற்கையுடன் நேரம் செலுத்துங்கள். கடற்கரை, பூங்கா, பச்சைப் பசேலென்ற புல்வெளி, நயத்தகு மரங்கள், அழகான மலர்கள் கொண்ட நந்தவனங்கள், ஓடை, நதி, இவையெல்லாம் தான்மை உணர்வின்றி, அமைதியாக உள்ளன. அவற்றோடு நாம் இருக்கும்போது, அவற்றின் அமைதியும் நிம்மதியும் நம்முடன் இணைந்துக் கொள்கின்றன. நாமும் நிம்மதி பெறுகிறோம்.
Posts in category ஊக்கம்
ஒரு குறிக்கோள் உள்ளது
ஒரு குறிக்கோள் உள்ளது இந்த உலகத்தில் நீங்கள் இருப்பதற்கு ஒரு குறிக்கோள் உள்ளது. அதன் பொருள் என்னவென்றால் நீங்கள் மற்றவர்களைப் போலவே மிகவும் முக்கியமானவர். மற்ற எவரையும் உம்மைப் பற்றி இதற்கு மாறாக சொல்லவோ, உங்களைத் தாழ்வாக நடத்தவோ அனுமதிக்காதீர்கள். உங்கள் சொந்த இயல்பில் வாழுங்கள். மேலும், உங்களுக்காக உள்ள குறிக்கோள் நிறைவேற உங்களை உதவுங்கள்.
நேரம் பறந்து செல்கிறது
நேரம் பறந்து செல்கிறது நேரம் பறந்து செல்கிறது. உங்கள் வாழ்வில் மிகுந்த காலம் இருப்பதாக நீங்கள் எண்ணலாம். ஆனால் வாழ்க்கை கணிக்க இயலாதது; முன்னறிந்து கூற முடியாதது. எனவே உபயோகமில்லாத விஷயங்களிலும், மன அமைதியைக் கெடுக்கும் மனிதர்களுடனும், கடந்த காலத்தைப் பற்றி ஆழ்ந்து யோசிப்பதிலும் நேரத்தை வீணாக்க வேண்டாம். தளரா நம்பிக்கை கொள்ளுங்கள். நாளை நீங்கள் கவனித்துக் கொள்ளப் படுவீர்கள் என்று அறிந்துக் கொண்டு, இன்று முழுதாக வாழுங்கள்.
நீங்கள் தனித்தன்மை வாய்ந்தவர்
நீங்கள் தனித்தன்மை வாய்ந்தவர் நீங்கள் தனித்தன்மை வாய்ந்தவர். உங்களைப் போல யாரும் கிடையாது. நீங்கள் இந்த அற்புத உண்மையை உபயோகப்படுத்தி, உங்களிடமும் உங்கள் வாழ்க்கையிலும் உள்ள ஆக்கப்பூர்வமான பொருள்களைக் கண்டவாறு, உங்களையும் உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் சந்தோஷமாக வாழச் செய்யலாம்; அல்லது உங்களிடமும் உங்கள் வாழ்க்கையிலும் உள்ள எதிர்மறையான பொருள்களைக் கண்டவாறு, உங்களையும் உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் வருத்தத்துடன் வாழச் செய்யலாம்.
போற்றி பாராட்ட நேரம் செலுத்துங்கள்
போற்றி பாராட்ட நேரம் செலுத்துங்கள் உங்கள் அன்பிற்குரியவரை – அவனையோ, அவளையோ – போற்றி பாராட்ட நேரம் செலுத்துங்கள். அவர் மீதுள்ள உங்கள் அன்பை சொற்களிலும் செயல்களிலும் காட்டுங்கள். இல்லையெனில் அவரை, அன்பும் பாராட்டுதலும் காட்டும் வேறு எவரிடமோ இழந்து விடக்கூடும். அவர் வேறு யாரின் அன்பையும் பரிவையும் நாட மாட்டார் என்று நீங்கள் சுயதிருப்தியுடன் சட்டை செய்யாமல் இருந்தால், நீங்கள் தவறாக இருக்கக் கூடும். இந்த விதத்தில் தான் ஒரு உறவு உடைகிறது, […]
சிறிதளவு கருணை நெடுந்தூரம் செல்லும்
சிறிதளவு கருணை நெடுந்தூரம் செல்லும் சரியான சமயத்தில் காட்டும் கருணை நெடுந்தூரம் செல்லும். எப்போது கருணை தேவைப்படுகிறதோ, அப்போது அளிப்பது நல்லது; நமக்கு சௌகரியப்படும்போது அல்ல. செயல்களில் அன்பு தருவது – நேயுற்றவர்களை பராமரிப்பது, உணவளிப்பது, சுத்தம் செய்வது, வீட்டு வேலைகளை கவனிப்பது போன்ற உதவிகள் மிகவும் சிறந்தது தான். ஆனால், வருத்தப்படுவோருக்கும் துயரத்தில் ஆழ்ந்தோர்க்கும் சொற்களிலும், ஒரு ஆதரவான அரவணைப்பிலும், நட்பிலும், உற்சாகப்படுத்துவதிலும் கருணை காட்டுவது அதை விட மேன்மையானது. கருணையே ஒரு […]
சந்தோஷத்திற்காக விட்டுக் கொடுங்கள்
சந்தோஷத்திற்காக விட்டுக் கொடுங்கள் ஒரு உறவு அல்லது மண வாழ்வில், சுய கருத்தை நிரூபிப்பதை விட, அல்லது எப்போதும் தன் இச்சைப்படியே நடப்பதை விட, ஒத்துழைத்து இசைந்து செல்வது முக்கியம். தன் சொந்த கருத்து தான் சரியென்று நிரூபிப்பதால் தான்மை உணர்வின் அகந்தைக்கு ஒரு ஊட்டம் கிடைக்கலாம்; ஆனால், அவ்வப்போது மற்றவரை மகிழ்விப்பதைச் செய்யாவிட்டால், அது அந்த நாள் முழுவதையும், அல்லது நல்லுறவையே கூட பாதிக்கக் கூடும். சாமர்த்தியமாக இருங்கள். சந்தோஷத்திற்காக கொஞ்சம் விட்டுக் […]
செயல்கள் சந்தோஷத்திற்காக செய்ய வேண்டு...
செயல்கள் சந்தோஷத்திற்காக செய்ய வேண்டும் நாம் செயல்களை சரியான காரணங்களுக்காக செய்ய வேண்டும். சிறந்த காரணம் என்னவெனில், அது நமக்கு உபயோகமாக இருப்பதுடன் நமக்கு சந்தோஷமும் மன அமைதியும் அளிப்பது தான். ஒரு செயலை வெறும் புகழ்ச்சிக்காகவும் புகழுக்காகவும் மட்டும் செய்தால், நாம் ஏமாற்றமடையக் கூடும். ஆனால், அதை நாம் விரும்புவதாலும், நாம் மன நிறைவு பெறுவதாலும் செய்தால், விளைவுகள் என்னவானாலும், நமது திறம்பட்ட முயற்சிகள் ஒரு காலும் வீணாகாது. மற்றவர்களும் அதை பாராட்டினால், அது […]
மனமும் நாமும்
மனமும் நாமும் மனம் தான் எல்லாம். எல்லாம் மனதில் தான் இருக்கிறது. மனம் நமது நண்பராக இருக்கலாம் அல்லது விரோதியாகவும் இருக்கலாம். அதை நமது சகாயத்திற்கும், நல்வாழ்விற்கும், சந்தோஷத்திற்கும், மன அமைதிக்கும் உபயாகித்துக் கொள்வது நம்மை பொருத்து இருக்கிறது. ஒரு குறிக்கோள் உள்ளது. நாம் ஒவ்வொருவரும் இந்த உலகில் ஒரு குறிக்கோளோடு தான் உருவாக்கப்பட்டுள்ளோம். நாம் அதனுடன் இணைந்து சென்றாலும் அல்லது கிளர்ச்சி செய்தாலும் அந்தக் குறிக்கோள் நிறைவேற்றப்படும். ஆனால், ஒரு மாபெரும் ஆசி என்னவென்றால், நமது வாழ்நாளில் நமக்கு […]