உங்கள் மேல் திடமான நம்பிக்கை கொள்ளுங்கள் உங்கள் மேல் நம்பிக்கை கொள்ளுங்கள். உங்களுக்குத் தேவையான வலிமையும், தைரியமும் உண்மையில் உங்களுக்குள் தான் இருக்கிறது. மற்றவர்களால் ஏதாவது ஒரு சமயத்தில் நீங்கள் ஏமாற்றமடைவீர்கள். மற்றவரிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள், ஆனால் உங்கள் மீது திடமான நம்பிக்கை எப்போதும் வைத்துக் கொள்ளுங்கள்.
Posts in category உற்சாகம் கருத்துக்கள்
எளிதான பிரச்சனைகளை பெரிதாக்க வேண்டாம்
எளிதான பிரச்சனைகளை பெரிதாக்க வேண்டாம் எளிதான விஷயங்கள் கடினமாக்கப் படக் கூடாது. ஒரு சின்ன விஷயத்தை நாம் பெரிதாக்கினால், அது எப்போதுமே ஒரு எளிதான விதத்தில் முடிவாகாது. அது ஒரு அநாவசியமான விவாதத்தை ஆரம்பிக்கலாம்; சண்டையையும், கொடிய சொற்களையும் புண்பட்ட உணர்ச்சிகளையும் விளைவிக்கலாம்; அது நாள் முழுவதையுமே நாசமாக்கலாம். ஒரு சூழ்நிலையை அமைதியாக, அமளியும் கொந்தளிப்பும் இல்லாமல் கையாள முடியும் வாய்ப்பு இருந்தால், அதை எடுத்துக் கொள்ளுங்கள். சாதாரண விஷயத்தை வெடிக்கும் இயல்புடையதாக்காமல் இருப்போம்.
இயல்பான தன்மைப்படி நடந்துக் கொள்வது த...
இயல்பான தன்மைப்படி நடந்துக் கொள்வது தான் சிறந்தது… எப்போதும் உங்களது இயல்பான தன்மைப்படி நடந்துக் கொள்ளுங்கள். அப்படி இருப்பது தான் சிறந்தது. ஆடம்பரமான, உயர்நிலை சார்ந்தவர்களுடன் பழகும்போது சில சமயம் சற்று இக்கட்டாகத் தோன்றினாலும், அவர்களுக்கு சமமில்லை என்று தோன்றினாலும், நீங்கள் உங்கள் இயல்பாக நடந்துக் கொண்டால் தான், அவர்கள் உங்களை விரும்புகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரிய வரும். வேறு யாரோ போல் நடந்துக் கொள்வதால் ஒரு பயனுமில்லை.
மேகங்கள் அகன்றால் கதிரொளி தெரியும்
மேகங்கள் அகன்றால் கதிரொளி தெரியும் சூரியன் எப்போதும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், மேகங்கள் கதிரொளியை மறைக்கின்றன. மேகங்கள் அகன்று சென்றவுடன், எப்போதும் பிரகாசித்துக் கொண்டு இருக்கும் கதிரொளி நமக்குத் தெரிகிறது; அதை நம்மால் உணரவும் முடிகிறது. அதே போல், சந்தோஷம் நமது உண்மைத் தன்மை. அது எப்போதும் உள்ளது. ஆனால், எண்ணங்கள் மனதில் இரைச்சல் போடும்போது, சந்தோஷம் நமக்குத் தேரிவதில்லை. எண்ணக் கூட்டங்கள் பெரும்பாலும் அற்பமானவை, மேலோட்டமானவை, அல்லது முக்கியமற்றவை என்று அறிந்துக் கொண்டு, அவற்றை அகன்றுச் […]
செயலின் குறிக்கோள் தான் முக்கியமானது
செயலின் குறிக்கோள் தான் முக்கியமானது ஒரு செயல் நல்லதா கெட்டதா என்று நிர்ணயிப்பது அந்த செயல் மட்டுமே அல்ல, முக்கியமாக அதன் பின்னால் உள்ள குறிக்கோள் தான். குறிக்கோள் நல்லாதாக்கப்பட்டால், செய்பவர் செயலின் விளைவை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஒரு மருத்துவர் ஒருவரின் உயிரைக் காப்பாற்ற ஒரு அறுவைக்கத்தியை பயன்படுத்தலாம். ஆனால் ஒரு கொலைகாரன் அதை ஒருவரைக் கொல்வதற்கு பயன்படுத்தலாம். கருவியும், செயலும் ஒரே மாதிரி இருக்கலாம், ஆனால் செயலின் குறிக்கோள் தான் அதை நல்லதாகவோ கெட்டதாகவோ […]
இயல்பான தன்மைப்படி நடந்துக் கொள்வது த...
இயல்பான தன்மைப்படி நடந்துக் கொள்வது தான் சிறந்தது எப்போதும் உங்களது இயல்பான தன்மைப்படி நடந்துக் கொள்ளுங்கள். அப்படி இருப்பது தான் சிறந்தது. ஆடம்பரமான, உயர்நிலை சார்ந்தவர்களுடன் பழகும்போது சில சமயம் சற்று இக்கட்டாக தோன்றினாலும், அவர்களுக்கு சமமில்லை என்று தோன்றினாலும், நீங்கள் உங்கள் இயல்பாக நடந்துக்கொண்டால் தான் அவர்கள் உங்களை விரும்புகிறார்கள் என்பது உங்களுக்கு தெரிய வரும். வேறு யாரோ போல் நடந்துக் கொள்வதால் ஒரு பயனுமில்லை.
நடந்ததைப் பற்றி கோபம் கொள்ளுங்கள்
நடந்ததைப் பற்றி கோபம் கொள்ளுங்கள் நமக்கு யார் மீதாவது அவர்கள் சொன்ன சொல்லுக்காகவோ, அல்லது செய்த செயலுக்காகவோ கோபம் வந்தால், நாம் அதைப் பற்றி மட்டுமே தான் பேச வேண்டும். அவர்களது தன்மையைப் பற்றியும் குணத்தைப் பற்றியும் இழிவாக எதையும் சொல்லக்கூடாது. “நீ சொன்னது அல்லது செய்தது தவறு” என்று சொல்ல வேண்டுமே தவிர, “உனக்கு மிகவும் கெட்ட குணமுள்ளது, நீ எப்போதும் மற்றவரைத் துன்புறுத்துகிறாய்” என்றெல்லாம் சொல்லக்கூடாது. ஒருவரின் தன்மையையே இறக்கிப் பேசுவது அவர்களை […]
உலகம் உங்கள் குழந்தைகளைப் புகழட்டும்
உலகம் உங்கள் குழந்தைகளைப் புகழட்டும் உங்கள் குழந்தைகளை, அவர்களின் போக்கின்படியே கண்டபடி நடந்துக் கொள்வதை ஆதரித்து வளர்ப்பது விவேகமில்லை. அது அவர்களுக்கு நல்லதுமில்லை. அப்படி அவர்களை நீங்கள் வளர்த்தால், அவர்கள் மிகவும் சிறப்பானவர்கள் என்று நீங்கள் நினைக்கலாம்; ஆனால் அவர்கள் உலகில் தோல்வி அடையக்கூடும். அவர்கள் எப்படி வேண்டுமானாலும் நடந்துக் கொள்ளலாம் என்றபடி வளர்ந்தால், நீங்கள் மட்டுமே அவர்களைப் பற்றி பெருமைப் படுவீர்கள். அதற்கு மாறாக நன்னடத்தையையும் நல்ல பண்புகளையும் கற்பித்து வளர்த்தால், உலகம் முழுவதும் […]