கொடிய இரக்கமற்ற மனிதரைப் பற்றி யோசிக்காதீர்கள் உங்களைக் கருணயின்றி கெட்ட விதமாக நடத்தியவர்களைப் பற்றி நீங்கள் யோசித்துக் கொண்டேயிருந்தால், இன்னும் அதிகமாக உங்களை துன்புறுத்தும் வலிமையை நீங்கள் அவர்களுக்குக் கொடுக்கிறீர்கள். பிரச்சனை அவர்களுடையது தான், உங்களுடையது அல்ல. உங்கள் கவனத்தைப் பெறும் தகுதி அவர்களுக்கு இல்லை. முடிந்த வரை அவர்களைப் பற்றி யோசிப்பதை நிறுத்துவது நல்லது. ஏனெனில், அது உபயோகமற்றது, மதிப்பற்றது.
Posts in category உற்சாகம் கருத்துக்கள்
விட்டுக் கொடுப்பது மன வலிமை தான்
விட்டுக் கொடுப்பது மன வலிமை தான் மற்றவர்களின் விருப்பத்திற்கு விட்டுக் கொடுப்பது இழந்து விட்ட கலையாகி விட்டது. விட்டுக் கொடுத்தால் தாம் வலிவற்றவர்கள் என்று மனிதர்கள் நினைக்கின்றனர். நிர்பந்தத்தால் இப்படி செய்ய வேண்டியிருந்தால், அது உண்மை தான். ஆனால், விருப்பத்துடன் ஒருவருக்கு விட்டுக் கொடுத்தால், அது சந்தோஷமும் மன அமைதியும் அளிக்கும். நமக்கு முன்னால் மற்றவரின் சுகத்தை வைப்பதும், வேறொருவரின் மகிழ்ச்சிக்காக நமது ஆசையை துறப்பதும் பலவீனத்தின் குறிப்பில்லை. அது உண்மையில், சுய திருப்தியும், மன […]
இரட்டை தர நிர்ணயம் உலக துன்பத்திற்கு ...
இரட்டை தர நிர்ணயம் உலக துன்பத்திற்கு காரணம் மக்கள் இரட்டை மதிப்பீடுகள் செய்யாவிட்டால், இந்த உலகம் வாழ்வதற்கு ஒரு இன்ப மயமான இடமாக மாறும். பெரும்பான்மையான துன்பமும், ஜனங்களுக்குள் சண்டையும் இரட்டை விதமாக நடத்துவதால் தான். ஒரு மனிதருக்கோ அல்லது ஒரு தொகுப்பைச் சேர்ந்தவர்களுக்கோ ஒரு வித விதிகளும், மற்றவர்களுக்கெல்லாம் வேறு விதிகளும் ஏன் இருக்க வேண்டும்? நமது ஊதியமோ அல்லது நடத்தப்படும் விதமோ நிர்ணயிப்பது நமது திறமைகளும், தகுதியும், சிநேகமான நடத்தையும் தான் காரணமாக இருக்க […]
உங்களை விட நான் அதிக புனிதமானவர்
உங்களை விட நான் அதிக புனிதமானவர் “உங்களை விட நான் அதிக புனிதமானவர்” என்ற மனோபாவம் தான் உலக இன்பத்திற்கும் ஆன்மீக முன்னேற்றத்திற்கும் மிகப் பெரிய தடங்கல். திரு ராம தீர்த்தர் அறிவித்தார் : “சீர்திருத்தவாதிகள் தேவை; ஆனால் அவர்கள் முதலில் தம்மை சீர்திருத்திக் கொள்ள வேண்டும்!” யேசு சொன்னார் : “உங்களுக்குள் பாவமே செய்யாதவர் யாராவது இருந்தால், அவர் (மற்ற ஒருவர் மேல்) முதல் கல்லைத் தூக்கியெறியட்டும்!”
நடப்பதைத் தானாக நடக்க விடுங்கள்
நடப்பதைத் தானாக நடக்க விடுங்கள் எல்லாவற்றிற்கும் விரைந்து அல்லல்பட்டு திட்டமிட்டு செயல்படுவது நம்மை உளக்குழப்பம் கொண்டு அமைதியின்றி இருக்கச் செய்கிறது. நடக்கப்போவது நமது சீற்றம் கொண்ட எண்ணங்களால் மாறுவதில்லை. அதற்கு பதிலாக, நடப்பதை நடக்க விடுங்கள். விளைவுகள் நமது கட்டுப்பாட்டில் இல்லை என்று அறிந்துக் கொண்டு, சரியான நோக்கத்துடன் சரியான செயல்களைச் செய்யுங்கள். இதனால் நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பீர்கள்.
நான் எப்போதும் இருக்கிறேன்
நான் எப்போதும் இருக்கிறேன் பிரபலமான பழமொழி என்னவென்றால், “நான் நினைக்கிறேன், அதனால் இருக்கிறேன்!” என்பதாகும். ஆனால் நான் தூக்கத்தில் நினைப்பதில்லை. அதனால் தூக்கத்தில் நான் இல்லை என்று பொருளா? உண்மை என்னவெனில், நான் தூக்கத்திலும், கனவிலும், விழிப்பிலும் உள்ளேன். எண்ணங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நான் எப்போதும் இருக்கிறேன்.
உங்களை மன்னித்துக் கொள்ளுங்கள்
உங்களை மன்னித்துக் கொள்ளுங்கள் தவறு செய்தால் தவறொன்றுமில்லை. ஒரு தவறு செய்து விட்டால், பரவாயில்லை. எல்லோரும் தவறு செய்கின்றனர். முதலில் உங்களையே மன்னித்துக் கொள்ளுங்கள். தவறிலிருந்து கற்றுக் கொள்ளுங்கள், பிறகு கடந்து செல்லுங்கள். தேங்கி நிற்காதீர்கள். கடந்த காலம் இறந்து விட்டது. நடந்தது நடந்து விட்டது. ஒரு தவறு செய்தீர்கள். அதனால் என்ன? அது உலகத்தின் முடிவில்லை! இவையெல்லாம் உங்கள் மன வலிமை மேம்படவே நிகழ்கின்றன. நீங்கள் முன்போலவே தான் இருக்கிறீர்கள்; கொஞ்சம் விவேகமும் […]