மேகங்கள் அகன்றால் கதிரொளி தெரியும் சூரியன் எப்போதும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், மேகங்கள் கதிரொளியை மறைக்கின்றன. மேகங்கள் அகன்று சென்றவுடன், எப்போதும் பிரகாசித்துக் கொண்டு இருக்கும் கதிரொளி நமக்குத் தெரிகிறது; அதை நம்மால் உணரவும் முடிகிறது. அதே போல், சந்தோஷம் நமது உண்மைத் தன்மை. அது எப்போதும் உள்ளது. ஆனால், எண்ணங்கள் மனதில் இரைச்சல் போடும்போது, சந்தோஷம் நமக்குத் தேரிவதில்லை. எண்ணக் கூட்டங்கள் பெரும்பாலும் அற்பமானவை, மேலோட்டமானவை, அல்லது முக்கியமற்றவை என்று அறிந்துக் கொண்டு, அவற்றை அகன்றுச் […]
Posts in category உற்சாகம்
சில உறவினரால் வரும் சந்தோஷம்
சில உறவினரால் வரும் சந்தோஷம் இரண்டு நண்பர்கள் விமான நிலையத்தில் சந்திக்கிறார்கள். முதல் நண்பர் மிகுந்த மகிழ்ச்சியால் களிப்புற்றிருக்கிறார். இரண்டாவது நண்பர்: நீங்க ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போலிருக்கே! என்ன விஷயம்? முதல் நண்பர்: என்னுடைய உறவினர்கள் தான்! அதனால் தான் சந்தோஷம்! இரண்டாவது நண்பர்: ஓ அப்படியா! என்ன, அவங்க வரப் போறாங்களா? முதல் நண்பர்: இல்லை!! அவங்க இப்போ தான் போனாங்க!
பரிசோதனைச் செலவு நஷ்டம்
பரிசோதனைச் செலவு நஷ்டம் ஒருவர் மருத்துவரிடம் உடல் நல பரிசோதனக்காக செல்கிறார். திரும்பி வந்ததும் மிகவும் வருத்தமாகக் காண்கிறார். மனைவி: ஏன் வருத்தமாக இருக்கிறீர்கள்? அவர்கள் என்ன சொன்னார்கள்? கணவர்: எவ்வளவு பணம் செலவழித்து பரிசோதனைகள் செய்துக் கொண்டேன்! ஆனால் எனக்கு ஒரு வியாதியும் இல்லை என்று சொல்லி விட்டார்கள்!
செயலின் குறிக்கோள் தான் முக்கியமானது
செயலின் குறிக்கோள் தான் முக்கியமானது ஒரு செயல் நல்லதா கெட்டதா என்று நிர்ணயிப்பது அந்த செயல் மட்டுமே அல்ல, முக்கியமாக அதன் பின்னால் உள்ள குறிக்கோள் தான். குறிக்கோள் நல்லாதாக்கப்பட்டால், செய்பவர் செயலின் விளைவை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஒரு மருத்துவர் ஒருவரின் உயிரைக் காப்பாற்ற ஒரு அறுவைக்கத்தியை பயன்படுத்தலாம். ஆனால் ஒரு கொலைகாரன் அதை ஒருவரைக் கொல்வதற்கு பயன்படுத்தலாம். கருவியும், செயலும் ஒரே மாதிரி இருக்கலாம், ஆனால் செயலின் குறிக்கோள் தான் அதை நல்லதாகவோ கெட்டதாகவோ […]
இயல்பான தன்மைப்படி நடந்துக் கொள்வது த...
இயல்பான தன்மைப்படி நடந்துக் கொள்வது தான் சிறந்தது எப்போதும் உங்களது இயல்பான தன்மைப்படி நடந்துக் கொள்ளுங்கள். அப்படி இருப்பது தான் சிறந்தது. ஆடம்பரமான, உயர்நிலை சார்ந்தவர்களுடன் பழகும்போது சில சமயம் சற்று இக்கட்டாக தோன்றினாலும், அவர்களுக்கு சமமில்லை என்று தோன்றினாலும், நீங்கள் உங்கள் இயல்பாக நடந்துக்கொண்டால் தான் அவர்கள் உங்களை விரும்புகிறார்கள் என்பது உங்களுக்கு தெரிய வரும். வேறு யாரோ போல் நடந்துக் கொள்வதால் ஒரு பயனுமில்லை.
நடந்ததைப் பற்றி கோபம் கொள்ளுங்கள்
நடந்ததைப் பற்றி கோபம் கொள்ளுங்கள் நமக்கு யார் மீதாவது அவர்கள் சொன்ன சொல்லுக்காகவோ, அல்லது செய்த செயலுக்காகவோ கோபம் வந்தால், நாம் அதைப் பற்றி மட்டுமே தான் பேச வேண்டும். அவர்களது தன்மையைப் பற்றியும் குணத்தைப் பற்றியும் இழிவாக எதையும் சொல்லக்கூடாது. “நீ சொன்னது அல்லது செய்தது தவறு” என்று சொல்ல வேண்டுமே தவிர, “உனக்கு மிகவும் கெட்ட குணமுள்ளது, நீ எப்போதும் மற்றவரைத் துன்புறுத்துகிறாய்” என்றெல்லாம் சொல்லக்கூடாது. ஒருவரின் தன்மையையே இறக்கிப் பேசுவது அவர்களை […]
உலகம் உங்கள் குழந்தைகளைப் புகழட்டும்
உலகம் உங்கள் குழந்தைகளைப் புகழட்டும் உங்கள் குழந்தைகளை, அவர்களின் போக்கின்படியே கண்டபடி நடந்துக் கொள்வதை ஆதரித்து வளர்ப்பது விவேகமில்லை. அது அவர்களுக்கு நல்லதுமில்லை. அப்படி அவர்களை நீங்கள் வளர்த்தால், அவர்கள் மிகவும் சிறப்பானவர்கள் என்று நீங்கள் நினைக்கலாம்; ஆனால் அவர்கள் உலகில் தோல்வி அடையக்கூடும். அவர்கள் எப்படி வேண்டுமானாலும் நடந்துக் கொள்ளலாம் என்றபடி வளர்ந்தால், நீங்கள் மட்டுமே அவர்களைப் பற்றி பெருமைப் படுவீர்கள். அதற்கு மாறாக நன்னடத்தையையும் நல்ல பண்புகளையும் கற்பித்து வளர்த்தால், உலகம் முழுவதும் […]
கொடிய இரக்கமற்ற மனிதரைப் பற்றி யோசிக்...
கொடிய இரக்கமற்ற மனிதரைப் பற்றி யோசிக்காதீர்கள் உங்களைக் கருணயின்றி கெட்ட விதமாக நடத்தியவர்களைப் பற்றி நீங்கள் யோசித்துக் கொண்டேயிருந்தால், இன்னும் அதிகமாக உங்களை துன்புறுத்தும் வலிமையை நீங்கள் அவர்களுக்குக் கொடுக்கிறீர்கள். பிரச்சனை அவர்களுடையது தான், உங்களுடையது அல்ல. உங்கள் கவனத்தைப் பெறும் தகுதி அவர்களுக்கு இல்லை. முடிந்த வரை அவர்களைப் பற்றி யோசிப்பதை நிறுத்துவது நல்லது. ஏனெனில், அது உபயோகமற்றது, மதிப்பற்றது.
விட்டுக் கொடுப்பது மன வலிமை தான்
விட்டுக் கொடுப்பது மன வலிமை தான் மற்றவர்களின் விருப்பத்திற்கு விட்டுக் கொடுப்பது இழந்து விட்ட கலையாகி விட்டது. விட்டுக் கொடுத்தால் தாம் வலிவற்றவர்கள் என்று மனிதர்கள் நினைக்கின்றனர். நிர்பந்தத்தால் இப்படி செய்ய வேண்டியிருந்தால், அது உண்மை தான். ஆனால், விருப்பத்துடன் ஒருவருக்கு விட்டுக் கொடுத்தால், அது சந்தோஷமும் மன அமைதியும் அளிக்கும். நமக்கு முன்னால் மற்றவரின் சுகத்தை வைப்பதும், வேறொருவரின் மகிழ்ச்சிக்காக நமது ஆசையை துறப்பதும் பலவீனத்தின் குறிப்பில்லை. அது உண்மையில், சுய திருப்தியும், மன […]