நடந்ததைப் பற்றி கோபம் கொள்ளுங்கள்
நடந்ததைப் பற்றி கோபம் கொள்ளுங்கள்
நமக்கு யார் மீதாவது அவர்கள் சொன்ன சொல்லுக்காகவோ, அல்லது செய்த செயலுக்காகவோ கோபம் வந்தால், நாம் அதைப் பற்றி மட்டுமே தான் பேச வேண்டும். அவர்களது தன்மையைப் பற்றியும் குணத்தைப் பற்றியும் இழிவாக எதையும் சொல்லக்கூடாது. “நீ சொன்னது அல்லது செய்தது தவறு” என்று சொல்ல வேண்டுமே தவிர, “உனக்கு மிகவும் கெட்ட குணமுள்ளது, நீ எப்போதும் மற்றவரைத் துன்புறுத்துகிறாய்” என்றெல்லாம் சொல்லக்கூடாது. ஒருவரின் தன்மையையே இறக்கிப் பேசுவது அவர்களை இன்னும் தீவிரமாக அதே விதத்தில் நடந்துக் கொள்ள தூண்டுகிறது. அது அவர்களை மேம்படுத்துவதில்லை.