எல்லாம் மன நோக்கத்தில் தான் உள்ளது எண்ணங்கள் கடலின் அலைகள் போல மனதில் ஏற்படுகின்றன. அவை நமது மன நோக்கத்தைச் சார்ந்தே எழுகின்றன. நமது நோக்கம் தவறாக இருந்தால், நாம் எல்லாவற்றையும் தவறாகவே தான் காண்கிறோம். நமது நோக்கம் சரியாக இருந்தால், எதையும் சரியாக, சீரான விதத்தில் காண்கிறோம். விவேகமுள்ளவர்களின் மதி நுட்பமான சொற்களை அறிந்துக் கொண்டு சிந்தித்தால், நமது நோக்கம் அறியாமையிலிருந்து விவேகத்திற்கு மாறும்.
Posts in category சுய முன்னேற்றம்
அன்பு உறவின் முடிவில் மென்மை வேண்டும்
அன்பு உறவின் முடிவில் மென்மை வேண்டும் நீங்கள் ஒருவருடன் அன்பு உறவை முடிக்க விரும்பினால், அதை மென்மையாகச் செய்யுங்கள். உங்களுக்கு எவ்வளவு கோபம் இருந்தாலும், வெறுக்க என்ன காரணங்கள் இருந்தாலும், மன விஷத்தை அவர் மீது சிதறாதீர்கள். ஏனெனில், ஒருவேளை உண்மையில் நல்லவரான ஒருவரை மிக ஆழ்ந்து வருந்தும் வகையில் நீங்கள் துன்புறுத்தலாம். மேலும்…..மற்றவருக்கு நீங்கள் அளிப்பது மீண்டும் ஒரு காலத்தில் உங்களுக்கே வந்து சேரும்.
வெளித்தோற்றம் ஏமாற்றக்கூடும்
வெளித்தோற்றம் ஏமாற்றக்கூடும் சிலர் நம்மிடம் மிகவும் இனிப்பாக இருப்பார்கள், ஆனால் அவர்களது நோக்கங்கள் அவ்வளவு இனிப்பாக இருக்காது. ஆனால், சிலர் நம்மிடம் இனிய நட்பில்லாதது போல இருக்கலாம், ஆனால் அவர்கள் நமது நலத்தை தமது மனதில் வைத்துக் கொண்டிருக்கலாம். மேலும், சிலர் நம்மை அதிகமாக முகபுகழ்ச்சி செய்யலாம்; ஆனால் அவர்கள் அதை உண்மையில் நம்பாமல் இருக்கலாம். உண்மையில், சில சமயம் வெளித் தோற்றங்கள் நம்மை ஏமாற்றக் கூடும். ஒருவரை அவரது வெளித்தோற்றத்தைக் மட்டுமே கொண்டு […]
உயர்ந்த அறிவுரைகளுடன் தொடர்பு
உயர்ந்த அறிவுரைகளுடன் தொடர்பு ஞானமுள்ள உயர்ந்த அறிவுரைகளுடன் தொடர்பு வைத்துக் கொள்வது உங்கள் வாழ்க்கையில் மிகவும் உபயோகமாக இருக்கும். அவை தற்போது தேவையில்லை, இப்போது எல்லாம் நலமாக உள்ளது என்று தோன்றினாலும், ஞானியரின் மேன்மையான அறிவுரைகளைப் படித்துக் கொண்டே, கேட்டுக் கொண்டே, சிந்தனை செய்தவாறே இருப்பது தான் விவேகம். ஏனெனில், எதிர்காலத்தில், நீங்கள் மிகவும் துன்புறும்படி ஏதாவது நிகழ்ச்சிகள் நிகழலாம். அப்போது அதைத் தாங்கிக் கொள்ளும் சக்தியில்லாமலோ, அல்லது சாந்தமாக செயல்பட முடியாமலோ போகலாம். […]