யாரையும் அலட்சியமாக எண்ண வேண்டாம் நம்மிடம் இனிமையாகவோ, கனிவாகவோ நடந்துக் கொண்டு உதவியும் செய்பவர்களை நாம் அலட்சியமாக எண்ணக்கூடாது. நமக்கு அண்மையில் இருப்பவர்கள் என்பதால் அவர்களுடைய பரிவையும் அன்பையும் நாம் புறக்கணிக்கக் கூடாது; அவர்களை நாம் அலட்சியம் செய்யக் கூடாது. உலகில் எதற்கும் அச்சாரம் இல்லை. உத்தரவாதம் இல்லை. உங்களுக்கு அன்பளித்து, பராமரித்து, அக்கறை கொள்பவர்களை பாராட்டுவதற்கு சிறிதாவது நேரம் எடுத்துக் கொள்ளுங்கள்.
Posts in category உற்சாகம் கருத்துக்கள்
குதர்க்கமான விமர்சனத்தை சட்டை செய்யாத...
குதர்க்கமான விமர்சனத்தை சட்டை செய்யாதீர்கள் நீங்கள் கெட்டவர் என்று யாரையும் சொல்ல விடாதீர்கள். உண்மையில், மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியம் இல்லை. நீங்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பது தான் முக்கியம். உங்களை நீங்களே மதிப்பிடுங்கள். ஏதாவது தவறு தெரிந்தால், அதைச் சரிப்படுத்திக் கொள்ளுங்கள். மற்றவர்களை மகிழ்விக்க மட்டுமே இல்லாமல், அது உங்களுக்கே நல்லது என்பதற்காகத் திருத்திக் கொள்ளுங்கள்.
மனக்கறுவு, கோபத்தை நீண்ட காலம் வளர்த்...
மனக்கறுவு, கோபத்தை நீண்ட காலம் வளர்த்த வேண்டாம் நீங்கள் உங்கள் அன்புக்குரியவரிடம், அல்லது உங்களுக்குப் பிரியமுள்ள நண்பர், உறவினரிடம், மனக்கறுவு, கோபத்தை நீண்ட காலம் வளர்த்த வேண்டாம். அதற்கு அவ்வளவு தகுதியில்லை. உங்கள் மன நிம்மதியும், சந்தோஷமும் இழப்பது மட்டுமில்லாமல், உங்கள் உடல் நலனுக்கும் அது கேடு விளைவிக்கக் கூடும். குழந்தைகள், நிகழ்ச்சிகள் நடைபெறும் வரையில் மட்டுமே அதை நினவில் வைத்துக் கொள்வார்கள். அவை கடந்தவுடன் அவற்றை மறந்து விடுவார்கள். அதனால் தான் அவர்கள் […]
ஆசையை பின்பற்று, ஆனால் எந்த விளைவுக்க...
ஆசையை பின்பற்று, ஆனால் எந்த விளைவுக்கும் தயாராக இரு சிலர் சொல்கிறார்கள்… “ஆசைப்படு! மனதின் கனவுகளைத் தொடர்ந்துச் செல்!” ஏனெனில் இதைக் கேட்கத்தான் நீங்கள் விரும்புகிறீர்கள். ஆனால், அவர் உண்மை சொல்பவராகவோ, விவேகமுள்ளவராகவோ இருந்தால், மேலும் சொல்வார்…”மன லட்சியங்களை, ஆசைகளைப் பின்பற்று! ஆனால், எந்த விளைவுக்கும் தயாராக இரு. ஏனெனில் நாம் முயற்சிகள் செய்யலாம், ஆனால் பலன்கள் நமது கட்டுப்பாட்டில் இல்லை. விளைவு எதுவானாலும் நீ முன் போலவே தான் உள்ளாய், சந்தோஷமாக இருப்பதில் […]
கர்மா என்றால் என்ன
கர்மா என்றால் என்ன “கர்மா” என்ற சமஸ்க்ருத சொல்லுக்கு, அதை எந்த விதத்தில் உபயோகிக்கிறோம் என்பதைப் பொருத்து பல பொருள்கள் உள்ளன. ஆனால், நாம் செய்யும் நல்லது அல்லது கெட்டதான செயல்களுக்கு அதே தரமான விளைவுகள் சீக்கிரமோ அல்லது காலம் கழித்தோ நமக்கே திரும்பி வரும் என்ற பொருளில் தான் இந்த சொல் சாதாரணமாக உபயோகிக்கப் படுகிறது. எனவே, அவை நம்மையே பின்பு பாதிக்கும் என்பதால், நாம் நமது எண்ணங்களைப் பற்றியும், செயல்களைப் பற்றியும் பொறுப்புடனும் […]
உயர்ந்த அறிவுரைகளுடன் தொடர்பு
உயர்ந்த அறிவுரைகளுடன் தொடர்பு ஞானமுள்ள உயர்ந்த அறிவுரைகளுடன் தொடர்பு வைத்துக் கொள்வது உங்கள் வாழ்க்கையில் மிகவும் உபயோகமாக இருக்கும். அவை தற்போது தேவையில்லை, இப்போது எல்லாம் நலமாக உள்ளது என்று தோன்றினாலும், ஞானியரின் மேன்மையான அறிவுரைகளைப் படித்துக் கொண்டே, கேட்டுக் கொண்டே, சிந்தனை செய்தவாறே இருப்பது தான் விவேகம். ஏனெனில், எதிர்காலத்தில், நீங்கள் மிகவும் துன்புறும்படி ஏதாவது நிகழ்ச்சிகள் நிகழலாம். அப்போது அதைத் தாங்கிக் கொள்ளும் சக்தியில்லாமலோ, அல்லது சாந்தமாக செயல்பட முடியாமலோ போகலாம். […]