கர்மா என்றால் என்ன
கர்மா என்றால் என்ன
“கர்மா” என்ற சமஸ்க்ருத சொல்லுக்கு, அதை எந்த விதத்தில் உபயோகிக்கிறோம் என்பதைப் பொருத்து பல பொருள்கள் உள்ளன. ஆனால், நாம் செய்யும் நல்லது அல்லது கெட்டதான செயல்களுக்கு அதே தரமான விளைவுகள் சீக்கிரமோ அல்லது காலம் கழித்தோ நமக்கே திரும்பி வரும் என்ற பொருளில் தான் இந்த சொல் சாதாரணமாக உபயோகிக்கப் படுகிறது. எனவே, அவை நம்மையே பின்பு பாதிக்கும் என்பதால், நாம் நமது எண்ணங்களைப் பற்றியும், செயல்களைப் பற்றியும் பொறுப்புடனும் கவனமுடனும் இருக்க வேண்டுமென்றும் நமக்கு அறிவுரை வழங்கப் படுகிறது.