விட்டுக் கொடுப்பது மன வலிமை தான்
விட்டுக் கொடுப்பது மன வலிமை தான்
மற்றவர்களின் விருப்பத்திற்கு விட்டுக் கொடுப்பது இழந்து விட்ட கலையாகி விட்டது. விட்டுக் கொடுத்தால் தாம் வலிவற்றவர்கள் என்று மனிதர்கள் நினைக்கின்றனர். நிர்பந்தத்தால் இப்படி செய்ய வேண்டியிருந்தால், அது உண்மை தான். ஆனால், விருப்பத்துடன் ஒருவருக்கு விட்டுக் கொடுத்தால், அது சந்தோஷமும் மன அமைதியும் அளிக்கும்.
நமக்கு முன்னால் மற்றவரின் சுகத்தை வைப்பதும், வேறொருவரின் மகிழ்ச்சிக்காக நமது ஆசையை துறப்பதும் பலவீனத்தின் குறிப்பில்லை.
அது உண்மையில், சுய திருப்தியும், மன வலிமையும், மற்றவருடன் உறவை மேம்பட வைக்கும் ஆர்வமும் இருப்பதைக் காட்டுகிறது.