நிராகரிப்பு கடவுளின் பாதுகாப்பு நீங்கள் நேசிக்கும் ஒருவர் உமது இதயத்தை உடைத்தால், அது இந்த தொடர்பில் பிறகு வரக்கூடிய பெருந்துன்பத்திலிருந்து கடவுள் உமக்கு அளிக்கும் பாதுகாப்பு என்று புரிந்துக் கொள்ளுங்கள். நிராகரிப்பு சில சமயம் மாறுவேடத்தில் வரும் ஆசியாகும்.
Posts in category உற்சாகம்
உங்களை விட நான் அதிக புனிதமானவர்
உங்களை விட நான் அதிக புனிதமானவர் “உங்களை விட நான் அதிக புனிதமானவர்” என்ற மனோபாவம் தான் உலக இன்பத்திற்கும் ஆன்மீக முன்னேற்றத்திற்கும் மிகப் பெரிய தடங்கல். திரு ராம தீர்த்தர் அறிவித்தார் : “சீர்திருத்தவாதிகள் தேவை; ஆனால் அவர்கள் முதலில் தம்மை சீர்திருத்திக் கொள்ள வேண்டும்!” யேசு சொன்னார் : “உங்களுக்குள் பாவமே செய்யாதவர் யாராவது இருந்தால், அவர் (மற்ற ஒருவர் மேல்) முதல் கல்லைத் தூக்கியெறியட்டும்!”
நடப்பதைத் தானாக நடக்க விடுங்கள்
நடப்பதைத் தானாக நடக்க விடுங்கள் எல்லாவற்றிற்கும் விரைந்து அல்லல்பட்டு திட்டமிட்டு செயல்படுவது நம்மை உளக்குழப்பம் கொண்டு அமைதியின்றி இருக்கச் செய்கிறது. நடக்கப்போவது நமது சீற்றம் கொண்ட எண்ணங்களால் மாறுவதில்லை. அதற்கு பதிலாக, நடப்பதை நடக்க விடுங்கள். விளைவுகள் நமது கட்டுப்பாட்டில் இல்லை என்று அறிந்துக் கொண்டு, சரியான நோக்கத்துடன் சரியான செயல்களைச் செய்யுங்கள். இதனால் நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பீர்கள்.
நான் எப்போதும் இருக்கிறேன்
நான் எப்போதும் இருக்கிறேன் பிரபலமான பழமொழி என்னவென்றால், “நான் நினைக்கிறேன், அதனால் இருக்கிறேன்!” என்பதாகும். ஆனால் நான் தூக்கத்தில் நினைப்பதில்லை. அதனால் தூக்கத்தில் நான் இல்லை என்று பொருளா? உண்மை என்னவெனில், நான் தூக்கத்திலும், கனவிலும், விழிப்பிலும் உள்ளேன். எண்ணங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நான் எப்போதும் இருக்கிறேன்.
உங்களை மன்னித்துக் கொள்ளுங்கள்
உங்களை மன்னித்துக் கொள்ளுங்கள் தவறு செய்தால் தவறொன்றுமில்லை. ஒரு தவறு செய்து விட்டால், பரவாயில்லை. எல்லோரும் தவறு செய்கின்றனர். முதலில் உங்களையே மன்னித்துக் கொள்ளுங்கள். தவறிலிருந்து கற்றுக் கொள்ளுங்கள், பிறகு கடந்து செல்லுங்கள். தேங்கி நிற்காதீர்கள். கடந்த காலம் இறந்து விட்டது. நடந்தது நடந்து விட்டது. ஒரு தவறு செய்தீர்கள். அதனால் என்ன? அது உலகத்தின் முடிவில்லை! இவையெல்லாம் உங்கள் மன வலிமை மேம்படவே நிகழ்கின்றன. நீங்கள் முன்போலவே தான் இருக்கிறீர்கள்; கொஞ்சம் விவேகமும் […]
யாரையும் அலட்சியமாக எண்ண வேண்டாம்
யாரையும் அலட்சியமாக எண்ண வேண்டாம் நம்மிடம் இனிமையாகவோ, கனிவாகவோ நடந்துக் கொண்டு உதவியும் செய்பவர்களை நாம் அலட்சியமாக எண்ணக்கூடாது. நமக்கு அண்மையில் இருப்பவர்கள் என்பதால் அவர்களுடைய பரிவையும் அன்பையும் நாம் புறக்கணிக்கக் கூடாது; அவர்களை நாம் அலட்சியம் செய்யக் கூடாது. உலகில் எதற்கும் அச்சாரம் இல்லை. உத்தரவாதம் இல்லை. உங்களுக்கு அன்பளித்து, பராமரித்து, அக்கறை கொள்பவர்களை பாராட்டுவதற்கு சிறிதாவது நேரம் எடுத்துக் கொள்ளுங்கள்.
குதர்க்கமான விமர்சனத்தை சட்டை செய்யாத...
குதர்க்கமான விமர்சனத்தை சட்டை செய்யாதீர்கள் நீங்கள் கெட்டவர் என்று யாரையும் சொல்ல விடாதீர்கள். உண்மையில், மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியம் இல்லை. நீங்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பது தான் முக்கியம். உங்களை நீங்களே மதிப்பிடுங்கள். ஏதாவது தவறு தெரிந்தால், அதைச் சரிப்படுத்திக் கொள்ளுங்கள். மற்றவர்களை மகிழ்விக்க மட்டுமே இல்லாமல், அது உங்களுக்கே நல்லது என்பதற்காகத் திருத்திக் கொள்ளுங்கள்.
மனக்கறுவு, கோபத்தை நீண்ட காலம் வளர்த்...
மனக்கறுவு, கோபத்தை நீண்ட காலம் வளர்த்த வேண்டாம் நீங்கள் உங்கள் அன்புக்குரியவரிடம், அல்லது உங்களுக்குப் பிரியமுள்ள நண்பர், உறவினரிடம், மனக்கறுவு, கோபத்தை நீண்ட காலம் வளர்த்த வேண்டாம். அதற்கு அவ்வளவு தகுதியில்லை. உங்கள் மன நிம்மதியும், சந்தோஷமும் இழப்பது மட்டுமில்லாமல், உங்கள் உடல் நலனுக்கும் அது கேடு விளைவிக்கக் கூடும். குழந்தைகள், நிகழ்ச்சிகள் நடைபெறும் வரையில் மட்டுமே அதை நினவில் வைத்துக் கொள்வார்கள். அவை கடந்தவுடன் அவற்றை மறந்து விடுவார்கள். அதனால் தான் அவர்கள் […]