Monthly Archive: September 2017
எல்லாம் மன நோக்கத்தில் தான் உள்ளது எண்ணங்கள் கடலின் அலைகள் போல மனதில் ஏற்படுகின்றன. அவை நமது மன நோக்கத்தைச் சார்ந்தே எழுகின்றன. நமது நோக்கம் தவறாக இருந்தால், நாம் எல்லாவற்றையும் தவறாகவே தான் காண்கிறோம். நமது நோக்கம் சரியாக இருந்தால், எதையும் சரியாக, சீரான...
நடப்பதைத் தானாக நடக்க விடுங்கள் எல்லாவற்றிற்கும் விரைந்து அல்லல்பட்டு திட்டமிட்டு செயல்படுவது நம்மை உளக்குழப்பம் கொண்டு அமைதியின்றி இருக்கச் செய்கிறது. நடக்கப்போவது நமது சீற்றம் கொண்ட எண்ணங்களால் மாறுவதில்லை. அதற்கு பதிலாக, நடப்பதை நடக்க விடுங்கள். விளைவுகள் நமது கட்டுப்பாட்டில் இல்லை என்று அறிந்துக் கொண்டு,...
நான் எப்போதும் இருக்கிறேன் பிரபலமான பழமொழி என்னவென்றால், “நான் நினைக்கிறேன், அதனால் இருக்கிறேன்!” என்பதாகும். ஆனால் நான் தூக்கத்தில் நினைப்பதில்லை. அதனால் தூக்கத்தில் நான் இல்லை என்று பொருளா? உண்மை என்னவெனில், நான் தூக்கத்திலும், கனவிலும், விழிப்பிலும் உள்ளேன். எண்ணங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நான் எப்போதும் இருக்கிறேன்.
நல்லவர் கெட்டவர் யாரும் இல்லை நல்லவர் என்றும் கெட்டவர் என்றும் இரண்டு வித மனிதர்கள் இல்லை. மனதில் கெட்ட எண்ணங்கள் இருக்கும்போது, மனம் கெட்டதாகிறது. மனதில் நல்ல எண்ணங்கள் இருக்கும்போது, மனம் நல்லதாகிறது.
கடவுள் எல்லோருக்கும் ஒன்று தான் கடவுள் எல்லோருக்கும் ஒன்று தான். காணும் விதம் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் முதன்மையான உணர்வு அன்பு தான். குறிக்கோள் சந்தோஷமும் மன அமைதியும் தான்.
உங்களை மன்னித்துக் கொள்ளுங்கள் தவறு செய்தால் தவறொன்றுமில்லை. ஒரு தவறு செய்து விட்டால், பரவாயில்லை. எல்லோரும் தவறு செய்கின்றனர். முதலில் உங்களையே மன்னித்துக் கொள்ளுங்கள். தவறிலிருந்து கற்றுக் கொள்ளுங்கள், பிறகு கடந்து செல்லுங்கள். தேங்கி நிற்காதீர்கள். கடந்த காலம் இறந்து விட்டது. நடந்தது நடந்து விட்டது....
யாரையும் அலட்சியமாக எண்ண வேண்டாம் நம்மிடம் இனிமையாகவோ, கனிவாகவோ நடந்துக் கொண்டு உதவியும் செய்பவர்களை நாம் அலட்சியமாக எண்ணக்கூடாது. நமக்கு அண்மையில் இருப்பவர்கள் என்பதால் அவர்களுடைய பரிவையும் அன்பையும் நாம் புறக்கணிக்கக் கூடாது; அவர்களை நாம் அலட்சியம் செய்யக் கூடாது. உலகில் எதற்கும் அச்சாரம் இல்லை. உத்தரவாதம்...
குதர்க்கமான விமர்சனத்தை சட்டை செய்யாதீர்கள் நீங்கள் கெட்டவர் என்று யாரையும் சொல்ல விடாதீர்கள். உண்மையில், மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியம் இல்லை. நீங்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பது தான் முக்கியம். உங்களை நீங்களே மதிப்பிடுங்கள். ஏதாவது தவறு தெரிந்தால், அதைச்...
மனக்கறுவு, கோபத்தை நீண்ட காலம் வளர்த்த வேண்டாம் நீங்கள் உங்கள் அன்புக்குரியவரிடம், அல்லது உங்களுக்குப் பிரியமுள்ள நண்பர், உறவினரிடம், மனக்கறுவு, கோபத்தை நீண்ட காலம் வளர்த்த வேண்டாம். அதற்கு அவ்வளவு தகுதியில்லை. உங்கள் மன நிம்மதியும், சந்தோஷமும் இழப்பது மட்டுமில்லாமல், உங்கள் உடல் நலனுக்கும் அது...
அன்பு உறவின் முடிவில் மென்மை வேண்டும் நீங்கள் ஒருவருடன் அன்பு உறவை முடிக்க விரும்பினால், அதை மென்மையாகச் செய்யுங்கள். உங்களுக்கு எவ்வளவு கோபம் இருந்தாலும், வெறுக்க என்ன காரணங்கள் இருந்தாலும், மன விஷத்தை அவர் மீது சிதறாதீர்கள். ஏனெனில், ஒருவேளை உண்மையில் நல்லவரான ஒருவரை மிக...