மேகங்கள் அகன்றால் கதிரொளி தெரியும்
மேகங்கள் அகன்றால் கதிரொளி தெரியும்
சூரியன் எப்போதும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், மேகங்கள் கதிரொளியை மறைக்கின்றன. மேகங்கள் அகன்று சென்றவுடன், எப்போதும் பிரகாசித்துக் கொண்டு இருக்கும் கதிரொளி நமக்குத் தெரிகிறது; அதை நம்மால் உணரவும் முடிகிறது.
அதே போல், சந்தோஷம் நமது உண்மைத் தன்மை. அது எப்போதும் உள்ளது. ஆனால், எண்ணங்கள் மனதில் இரைச்சல் போடும்போது, சந்தோஷம் நமக்குத் தேரிவதில்லை. எண்ணக் கூட்டங்கள் பெரும்பாலும் அற்பமானவை, மேலோட்டமானவை, அல்லது முக்கியமற்றவை என்று அறிந்துக் கொண்டு, அவற்றை அகன்றுச் செல்ல விட்டு விட்டால், நமக்குள் சுய தன்மையாக உள்ள சந்தோஷம் அனுபவிக்கப்படும்.