உங்களது உண்மையான அழகை உணருங்கள்
உங்களது உண்மையான அழகை உணருங்கள்
ஆடை அலங்கார வியாபாரிகள் நம்மை வெளிப்புறம் இழுத்து நாம் மிகவும் அழகாக இருப்பதாக கற்பனைச் செய்ய வைத்து நமது பணத்தாலேயே செல்வந்தராகிறார்கள். நாம் எப்படி காட்சியளிக்கிறோம், எப்படி வாழ்கிறோம் என்பதை அவர்கள் நிர்ணயிக்கிறார்கள். சிறிதளவு ஒப்பனை, நறுமணம், சீர்படுத்துதல், இவை நம்மை மகிழ்விப்பதோடு மற்றவர்களுக்கும் மதிப்பு தருவதால், அது நல்லது தான். ஆனால், சுயநலமான இந்த அலங்கார வணிகர்களுக்கு இரையாக ஆவது முட்டாள்தனம். உண்மை என்னவென்றால், உங்களுடைய உண்மைத் தன்மையே அழகும் சந்தோஷமும் தான். நீங்கள் ஏற்கனவெ அழகு தான். அதை உணருங்கள்.