எல்லோருக்கும் சமமான கண்டிப்பு
எல்லோருக்கும் சமமான கண்டிப்பு
இரண்டு பணியாளர்கள் பணி முதல்வரிடம் சம்பள உயர்வு கேட்க வருகின்றனர்.
பணி முதல்வர் யாருடனோ தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கிறார்.
‘நீ எப்பவும் எதைப் பத்தியாவது குறை சொல்றே! நீ என்ன, எல்லாம் ரொம்ப சுலபம், கஷ்டப்பட்டு வேலை செய்யாமலே எல்லாம் கிடைக்கும்னு நினைக்கிறயா?”
பணியாளர் 1: என்னப்பா, அவர் ரொம்ப கோவமா இருக்கார் போலிருக்கே!
பணியாளர் 2: இல்லை, இல்லை! அவர் ஒருவேளை சோம்பேறியான ஒரு பணியாளர் கிட்ட ரொம்ப கண்டிப்பா இருக்கலாம். அவர் அவ்வளவு கொடூரமானவர் இல்லை.
பணி முதல்வர் தொடர்ந்து தொலைபேசியில் பேசுகிறார் : ‘அம்மா, எத்தனை தடவை சொல்றது? இந்த தடவை மன்னிச்சிடறேன். இனிமேலாவது வீட்டு வேலையை சரியா கவனி. நான் வந்ததும் சாப்பாடு தயாரா இருக்கணும். சரியா?’